# நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது # பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்; தஞ்சாவூரை சேர்ந்த பி.ஆர். பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் # மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக,முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி பயணம் # நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த சுமார் 153 பேர் பலி # பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நெய்வேலியில் கடந்த 44 நாட்களாக என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது #

print A+     A-
பஸ் கட்டணங்கள், பால் விலை அதிகரிப்பு: ஜெ. அறிவிப்பு
Posted Date : 15:11 (17/11/2011)Last updated : 07:11 (18/11/2011)

சென்னை: தமிழகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், பால் விலை உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

மேலும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பேருந்து கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு விவரம்:

பேருந்து கட்டண உயர்வு எவ்வளவு?

சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் Semi deluxe புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்;

Super Deluxe மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்;  Ultra Deluxe  புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்;

சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம்  2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து  14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 உயர்வு...

பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் ஏற்கெனவே பெருத்த நட்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு; அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உரை..

தமிழக அமைச்சரைவை கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதன் விவரம்:

"பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் இன்றியமையா சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த உயரிய நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில், அதன் செயல்பாடுகள் முடங்கிப் போகும் அளவுக்கு, முந்தைய திமுக அரசு, பொதுத் துறை நிறுவனங்களை சீரழித்துவிட்டது. 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட எனது தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொண்டு வந்த அதே சமயத்தில், துறை வாரியான ஆய்வுகளையும் மேற்கொண்டேன்.

இந்த ஆய்வுகளின் போது, தமிழக அரசு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு...

இதனையடுத்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சீர் செய்து மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலப் பணிகளையும் முடுக்கிவிட முடிவு செய்து, மின் வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டும்;
அதிக அளவில், கூடுதல் விலை கொடுத்து, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்;

மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்; மடிக் கணினி வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும்; கடலோரப் பகுதி மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14 ஜூன், 2011 அன்று புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனுவினை அளித்தேன்.

இது குறித்து நீண்ட நேரம் என்னுடன் உரையாடிய பாரதப் பிரதமர், ஆவன செய்வதாக உறுதி அளித்தார். பின்னர், இந்த கோரிக்கை மனு மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், திட்டக் குழு இது குறித்து உரிய முடிவு எடுக்கும் என்றும் பாரதப் பிரதமர் தெரிவித்தார்.

6 ஜூலை, 2011 அன்று மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் திரு. மான்டெக் சிங் அலுவாலியா அவர்களை நான் சந்தித்த போது, இந்தச் சிறப்பு நிதியுதவி குறித்து அவருக்கு நினைவூட்டினேன். இருப்பினும், திட்டக் குழுவிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எவ்வித நிதி உதவியும் கிடைக்கவில்லை.

அதே சமயத்தில், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் 21,614 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதி தொகுப்பு உதவி வழங்கியுள்ளது.  இதிலிருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

மரணப் படுக்கையில் பொதுத் துறைகள்..

மத்திய அரசு எந்த உதவியையும் தமிழகத்திற்கு செய்ய முன் வராத நிலையில்; தமிழகத்தின் நிதி நிலைமையும் அதலபாதாளத்தில் இருக்கின்ற சூழ்நிலையில்; முடங்கும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை, குறிப்பாக மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை  நிலைநிறுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம்.

மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால், அவை முற்றிலும் செயலற்று போய்விடும்.  அதனால் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, அத்தகைய ஒரு நிலையை தடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த அரசு உள்ளது.

மின் வாரியத்துக்கு ரூ.42,175 கோடி கடன்..

தமிழ்நாடு மின்சார வாரியத்தை எடுத்துக் கொண்டால், 31 மார்ச், 2011 அன்றைய நிலவரப்படி 40,659 கோடி ரூபாய் நஷ்டத்தில் அது இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், மின் தேவையை சமாளிக்க மின்சாரத்தை வெளிச் சந்தையிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியது தான். 2010-2011 ஆம் ஆண்டில் மட்டும் 19,302 கோடி ரூபாய் அளவுக்கு வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு இருக்கிறது.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2005-2006 ஆம் ஆண்டில், 4,911 கோடி ரூபாய் என்று இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நஷ்டத்தை 40,659 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றிய பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையே சாரும்.

இது மட்டுமல்ல. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி ரூபாய் ஆகும்.  இதே நிலைமை நீடித்தால், இந்த நிதி ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் அளவு 53,000 கோடி ரூபாயை தாண்டிவிடும்.

மேலும், மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய தொகை 10,000 கோடி ரூபாய் ஆகும். தமிழக அரசின் மொத்த கடன் அளவான 1 லட்சத்து 1 ஆயிரத்து 349 கோடி ரூபாயுடன், மின்சார வாரியத்தின் கடன் அளவான சுமார் 53,000 கோடி ரூபாயை ஒப்பிட்டுப் பார்த்தால், மின் வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெளிவாகும்.

கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியம் புதியதாக கடன் வாங்கி, பழைய கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தி வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில்  21,385 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தியுள்ளது. இவ்வாறு கடனில் மூழ்கி திவாலாகும் நிலையை மின்சார வாரியம் எட்டிவிட்டது.

இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், மின்சார வாரியம் மேலும் கடன் பெறவேண்டும். ஆனால், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்து கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு முழுமைக்கும் வழங்கப்பட வேண்டிய மானியத் தொகையான 2,016 கோடி ரூபாயை முன்னதாகவே அரசு வழங்கியுள்ளது. 

மேலும், பங்கு மூலதனம் ஆக 1,055 கோடி ரூபாயை அரசு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக 500 கோடி ரூபாயை அரசு வழங்கி உள்ளது. இதற்கு மேலும் மின்சார வாரியத்திற்கு பணம் அளிக்க மாநில அரசிடம் பணம் இல்லை.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பும், மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டிய கடமையும் எனது தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் ரூ.6,150 கோடி இழப்பு..

இதே போன்று தான் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன.  எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய திமுக அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது.  2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன.

இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு  ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

துர்ப்பாக்கிய நிலையில் ஆவின்...

இதே போன்று ஆவின் நிறுவனத்தின் நிலைமையும் முந்தைய திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால், மோசமடைந்துவிட்டது. எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2006-ஆம் ஆண்டு வரை, லாபம் ஈட்டி வந்த பால் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஆவின் நிறுவனம் உள்ளது.

கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் சுமார் நான்கு ரூபாய் அளவுக்கு ஆவின் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, 22 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம், தனது கொள்முதலை குறைத்துக் கொள்ள வேண்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பணம் கொடுப்பதற்காக எனது தலைமையிலான அரசு மாதா மாதம் 17 கோடி ரூபாய் அளவுக்கு ஆவின் நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறது. தனியார் நிறுவனங்களை விட,  ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் அடையும் பயனை விட இடைத் தரகர்கள் அதிக அளவில் பயன் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது.  இதனால் ஆவின் நிறுவனத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, "வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்" என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

மின் கட்டண உயர்வு எப்போது? 

தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும்.

அதே சமயத்தில், விவசாயிகள், நெசவாளர்கள், ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் வருபவர்கள், ஆகியோருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வழி வகை செய்யும் வகையில் அதற்கான மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

இது மட்டுமல்லாமல், அதிக அளவு மின்சாரம் உபயோகிப்பவர்களைத் தவிர, ஏனைய வீட்டு மின்சார பயனீட்டாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கும். மின் அமைப்புகளின் நிதிநிலையை சீர்படுத்தவும்; புதிய உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கவும்; நிதி உதவி தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, 2,000 கோடி ரூபாய் கூடுதல் பங்கு மூலதனமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எனது தலைமையிலான அரசு வழங்கும்.

மேலும், மின்சார திருட்டை ஒழிப்பது; மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்பது; மின்சார பகிர்மான கட்டமைப்புகளை மேம்படுத்துவது; மின் இழப்பை குறைப்பது; நிர்வாக செலவுகளை நெறிமுறைப்படுத்தி கட்டுப்படுத்துவது; செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும்.

பேருந்து கட்டண உயர்வு... பால் விலை அதிகரிப்பு...

போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

இதேபோல், பால் விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு உயர்த்தப்பட்ட பின்பும் வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலையை விட ஆவின் பால் விலை குறைவாகவே இருக்கும். மேலும், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள விலையை விடவும் குறைவாகவே இருக்கும்.

வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்?

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும்; இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.

டீசல் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கின்ற நிலையில், சிறப்புக் கடன் உதவி என்ற வகையில், மத்திய அரசு தமிழகத்துக்கு ஒரு ரூபாயைக் கூட அளிக்காத நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசு கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை கூட வழங்காத நிலையில், தமிழக அரசே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பொதுத் துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட வைக்க தமிழக மக்களாகிய உங்களிடம் அல்லாமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?

எத்தனை முறை கேட்டாலும், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்?  முந்தைய மைனாரிட்டி திமுக அரசு, தமிழ்நாட்டை முற்றிலுமாக சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்ட சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தமிழக மக்களாகிய நீங்கள், ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள்.

கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?

எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

படம்: குமரேசன்

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
M.NAGARAJ6 Months ago
அம்மா வாழ்க..........................ஆண்டிபட்டி,சக்கம்பட்டி,
M C Ramachandran6 Months ago
Dear Guna sorry for my delayed reply if you consider about the profit of Rs. 255 kindly consider these points also
1. Still there is Capital cost of purchasing Chassis (Ashok Leyland, TATA Etc).
2. Then we need to consider for Body Building, Rental Maintenance for Transport corporations, Insurance, Tax, Accident Claims, Festival Bonus, Administration Expenses starting from Minister to Managers and Engineering, Purchase, Workers from Mechanics to Tyre Changers.
3. In other hand we need to think about Free Bus Pass. You can’t consider only for Metropolitan or cosmopolitan.
4. Think about the routes to Padur, Chinna Nerkundram, Punnai Nallur, Mundiyambakkam Interior, Sanar Pandai etc.
5. You can’t see any Private buses operating in such village areas those people has to walk a Kilometer or more to their bus stop, that too the bus will go once or twice inside that villages. These areas do not attract enough crowd also.

Now kindly consider my friend where the money will come for transport

M C Ramachandran6 Months ago
Dear SK sorry for my delayed reply Profit margin of Private Bus Owners So simple

Replacement of Chassis frequently with Regular Tie ups of Dealer end. This reduces their maintenance labour for oil and brakes (Eg. ABT, PNKSRT, Bharathi, Vijalakshmi, Madurai Radha, Solaimalai. etc)
Driver Salary is only Rs. 8000 PM Collection Bata
1.5 Conductors. i.e. these operators have spare bus and tourists buses those employees will be rotated accordingly
one Driver one day no shifts, one conductor (these people doesn’t have any workmanships)
Luggage Loads, Milk cans, Farming Goods (there is no stand in top of Government bus)
No Bus Pass or Free trips
Prime time operation
High Speed Riding
Loading of 80 Persons per trip (in peak hours government buses too load but 50% will be free pass)
Hidden Income i.e. killing of tax
Purchasing of Tyre and Tubes through Bus Owners association (tender benefits of Government goes to bribe whereas here the concessions are real)
Pumps and Manifold of these buses are cleaned as it runs in Diesel Kerosene not in pure diesel
None of the accident claims are made by owners everything through the Insurance companies (that’s why General insurance companies operate in a loss of more than 1,00,000 crores (only A. Raja can help this)
Pick up of passengers at any end
Time keepup is sharp, They operate extra trips in the specified time to Government buses (i.e. 7 Trips one government bus = 8 trips one private bus)
Now say me friend how easy for them to manage at the same time you can’t see any Buses running before 6.00 AM and After 9.00P.M whereas government buses……………..?!

Hussain7 Months ago
குணா அவர்களே என்னதான் செய்யச் சொல்லுறீங்க??? செலவைக் கட்டுப் படுத்தனும்னா அரசு ஊழியர் சம்பளத்துல கை வெக்கணும் .... அது முடியாது .... குய்யோ முறையோன்னு கத்துவார்கள் .... என்னவோ தமிழ் நாடு முழுவதும் ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்படுவதுபோல சன் டீவி போன்ற மீடியாக்கள் மக்களைத் தூண்டி விடுவார்கள் .... திட்ட அறிக்கை குடுத்தும் திட்டக் கமிசன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறது ..... சரி 42000 கோடி கடன், தனியார் மயமாக்குவோம்னாலும் எதிர்க்கட்சிகள் கொடி பிடிக்கும் .... கரண்ட்டும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வேனும் ....டாஸ்மாக்கையும் மூடனும் .... இலவசம் இல்லேன்னா மக்கள் ஓட்டுப் போடமாட்டார்கள் .... இலவசம் அறிவிச்சாதான் ஆட்சிக்கே வரமுடியும்னு நெலமைய ஏற்படுத்தியாச்சு .....நிர்வாகத்த செம்மை பண்னலம்னா அரசு ஊழியர் சங்கங்கள் உடனே அடக்குமுறை, ஆணவம்னு அறிக்கை விடும்.... இவ்வளவு சிக்கல்ல என்னதான் வேறு செய்ய முடியும்கிறீங்க ??? நான் ஜெ.ய ஆதரிக்கனும்னு சொல்லல ... சரி ... இவ்வளவு சிக்கல்ல நீங்களே முதல்வரா இருந்தா என்னதான் செய்வீங்க பிரதர் ? வெலவாசி எனக்கும்தான் இருக்கு சகோதரா .... அரசு என்னதான் செய்ய முடியும்னு சொல்றீங்க ??
Mani7 Months ago
பொதுமக்களே.... ஓட்டு போட்டு முடித்துவிட்டீர்கள். இனி 5 ஆண்டு காலத்திற்கு உங்களுக்கு வேலை இல்லை அவர்களுக்கு கவலை இல்லை. இனி வரிசையாக ஆப்புதான். மனதை திட படுத்திக் கொண்டு தயாராக இருங்கள்...
ammaathurai7 Months ago
அம்மா நாமம் வாழ்க....!
Radha Krishnan7 Months ago
ஆ...ரெடி ஸ்டார்ட் தெ மியுஸிக்......
selva peria7 Months ago
வாழ்க தமிழகம், வளர்க தமிழ் மக்கள்......கோவிந்தா...கோவிந்தா....
Thamilarasu K7 Months ago
This price rise is inevitable and in the interest of the state. The previous government borrowed money to fund the welfare schemes. It is like your father living a luxury life on borrowed me. At some point the debt burden will fall you on. Instead of leaving our next generation in troubles, it is better we take the correct measures now itself.
a.jeevagan7 Months ago
நடுத்தர மக்களை வேதனைப்படுதும் தமிழக அரசு
MONNALEBBAIUSMAN7 Months ago
ஒட்டு போட்ட எல்லாருக்கும் நன்றி
MONNALEBBAIUSMAN7 Months ago
மக்கள் ஒட்டுமொத்தமாக ஒட்டு போட்டு ஜெயலலிதா ஜெயிக்க வைத்தார்கள் பலனையும் ஒட்டுமொத்தமாக அனுபவிக்கட்டும்:
Suresh7 Months ago
அப்படியே அந்த கட்டாய ஹெல்மட் சட்டதையும் ஏதாவது குத்தம் சொல்லி எடுதுடுகமா. உகலுகு ஒட்டு பொட்ட ஜனகலுகு அந்த ஒரு புன்னியமவது கிடைகடும்.

Suresh
Malaravan7 Months ago
Well said Mr.Arunagiri... It is true that she is not having good relationship with the Central Govt. and also to the neighborhood States. She is always giving headache to all. She doesn't know how to speak in gentle manner and her approach is too wrong.
G.ARUMUGAM 7 Months ago
அம்மாவின் அறீக்கை தமிழக எதிர்காலத்திய மேம்பாட்டை நோக்கியதே ?
இதனை யாரும் குரை கூராதீர்கள்,இன்றூ ஒரு தண்ணீர் பாக்கெட் 2 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்களால்,ஒரு ரூபாய் விலை ஏற்றத்தை பொருத்துக் கொல்லமுடியும்.ஷேர் ஆட்டோ வில் மினிமம் 10 ரூபாய் கொடுக்கும் போது பல லட்சம் கொடுத்து வாங்கும் பஸ் ஸூக்கு 1 ரூபாய் கூட கொடுக்க முடியாதா ?வீனாக போன உதிரி கட்சி கலின் கூப்பாடுகலுக்கு செவி சாய்க்காமல் இருப்பதே வழர்ச்சீக்கு வழி,
guna7 Months ago
@எம்.சி.ராமச்சந்திரன்

ஒரு சிங்கிள் ட்ரிப்புக்கு நீங்கள் சொல்வது ரூ.129 நட்டம் என்று. சரியென்றே வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு கி.மீ.க்கு 24 பைசா அதிகமாக்கியிருக்கிறார். எனவே 40கி.மீ.க்கு கிட்டத்தட்ட ரூ.9.5 அதிகமாகும். ஒரு டிக்கெட் 20ரூ ஆகும். 40 பேர் ஒரு ட்ரிப்புக்கு பேருந்தில் சென்றால் 40 * 9.5 = 384ரூ.

நீங்கள் சொன்னது ஒரு ட்ரிப்புக்கு 129ரூ நஷ்டம் என்று. இப்போது ஒரு ட்ரிப்புக்கு 384ரூ ஆகிறது. உங்கள் கணக்குப்படியே பார்த்தாலும் 384 - 129 = 255ரூ. அதாவது நேற்றைய விலையேற்றத்திற்குப்பின் ஒரு சிங்கள் ட்ரிப்புக்கு அரசுக்கு கிடைக்கும் லாபம் மட்டும் ரூ.255. ஒரே ஒரு அரசாணை மூலம் நஷ்டத்தை அடைக்க நினைத்தது தவறில்லை. அதற்காக பகல் கொள்ளை அடிக்ககூடாது. நல்ல மனதுள்ளவர்கள் நினைத்துப்பாருங்கள். ஒரு அரசாங்கம் நஷ்டத்தில் இயங்கும் அரசுத்துறையை நட்டமின்றி, சிறிய லாபத்துடன் இயக்க நினைத்தால் தவறில்லை. ஆனால் பகல்கொள்ளை அடிப்பதை நியாயப்படுத்தவும் சிலர் இருக்கிறார்கள்.
guna7 Months ago
@ஹூசைன்
"இந்த கணக்கு கூட புரியாம ஒரு பகுத்தறிவே இல்லாத உடன்பிறப்புக் கூட்டம் ... என்னாத்த சொல்லுறது"

விலையேற்றம் தவிர்க்க முடியாதது. ஒப்புக்கொள்கிறேன். பெட்ரோல் டீசல் விலைகள் ஏறும்பொழுது மத்திய அரசை சபித்துக்கொண்டே விலையேற்றத்துக்கு பழகிக்கொண்டோம். ஆனால் தமிழக அரசு ஒரேயடியாக 175ரூ. டிக்கெட்டை 250ரூ.க்கு மாற்றுவதும், 10ரூ டிக்கெட்டை 17ரூக்கு ஏற்றுவதும், 17ரூ பால் பாக்கெட்டை 24ரூவாய்க்குவதும்தான் உங்கள் பார்வையில் பகுத்தறிவாக படுகிறதா?

அந்தகும்பல் இலவசங்களை விரல்களால் அள்ளித்தெளித்த காரணத்துக்காக, ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாடி கையே என்ற கணக்கில் பாட்டி இரு கைகளாலும் மாங்கு மாங்கென்று இலவசங்களை அள்ளித்தெளித்துவிட்டு இப்போது மத்திய அரசு உதவவில்லை பாகிஸ்தான் அரசு கைவிட்டுவிட்டது என்று ஒப்பாரி வைப்பது நிர்வாகத்திறமையா?

ஓட்டுக்குப்பயந்து அவர்கள் விலையே ஏற்றாமல் வைத்திருந்ததாக நீங்கள் சொல்வது சரிதான். அப்படி என்றால் மிகுந்த பகுத்தறிவும் அளவிடமுடியாத நிர்வாகத்திறமையும் உள்ள பாட்டி ஏன் கடந்த தேர்தல் வாக்குறுதியில் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு இலவசங்களை மானாவாரியாக அள்ளி வீசினார்? ஓட்டுக்காகத்தானே? விலையேற்றத்தை கொண்டுவருவதாக இருந்தால் உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பாகவே அல்லவா இவர் செய்திருக்கவேண்டும்? ஓட்டுப்பொறுக்குவதற்காகத்தானே. தேர்தல்கள் எல்லாம் முடிந்தபிறகு இந்த விலையேற்றம். இவரும் ஓட்டுப்பொறுக்கித்தானே?
விலைவாசியை குறைப்பேன, வானத்தை அளப்பேன், ஆறு மாதத்தில் மின் தடையை நீக்குவேன், சுட்டெரிக்கும் சூரியனை பனிமலையாக்குவேன் என்றெல்லாம் வாய்கிழிய கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இன்றைக்கு அந்த வாக்குறுத்களுக்கு முற்றிலும் மாறாக நடந்துகொள்வதுதான் உங்களைப்பொறுத்தவரையில் என்பதும் என்றால், பாட்டி எதைச்செய்தாலும் கூழைகும்பிடு போடும் காட்டுமிரான்டித்தனமும்தான் உங்களைப்பொறுத்தவரையில் பகுத்தறிவு என்றால் அந்த அறிவே எனக்கு வேண்டாம்.

கூடையை சுமந்துகொண்டு அரசுபேருந்து நடத்துனரின் வசைமொழியைக் கேட்டுக்கொண்டு காய்கறி விற்கப்போகும் ஏழைப்பாட்டிகளின் தலையில் இவ்வளவு பெரிய சுமையை தூக்கிவைக்கும் இந்த அலங்காரசீமாட்டி, ஒன்றுக்குமே உதவாத அமைச்சர்களுக்கும் தனக்குமான சலுகைகளையும் செலவுகளையும் குறைத்து மக்களின் பாரத்தை குறைக்கலாமே? போய் உங்கள் செல்வச்சீமாட்டியிடம் உங்கள் பகுத்தறிவை காட்டுங்கள். தண்டசெலவுகளை குறைக்கச்சொல்லி உங்கள் தலைவியிடம் முறையிடுங்கள்.
sanky7 Months ago
இணைய வசதியுள்ள மத்திய தர மற்றும் மேல்த்தட்டு வாசகர்களே இந்தளவுக்கு எரிச்சலுடன் பாட்டி பற்றி தங்களது அபிப்பிராயங்களைப்பதிவு செய்துள்ளார்கள் என்றால், அடிமட்ட தமிழகத்து பொதுமக்களிடம் அவர் அடிக்கும் கொட்டம், அராஜகம் குறித்து எந்தளவுக்கு எரிச்சலும் புகைச்சலும் இன்னமும் கனன்றுகொண்டே இருக்குமோ....!!! ஆண்டவா...நீ தான் பாட்டியை திருத்தணும்!!!
Azif7 Months ago
I have a Question! Can't they increase the price in drinks(Brandy, whisky) sold at Dasmaac and tally the Dept's. They have a good profit in Dasmac. If loss comes means the goverment both DMK and ADMK put on people head. But if profit comes means they the Government will take it. Both DMK and ADMK or making people fools. They will never stop cheating people. We can write only here. It's of no use to the people.
பாலா7 Months ago
பால் கொள்முதல் விலையை அதிகரித்து இருப்பதால் பால் விற்பனை விலையை அதிகரித்து இருப்பதாக ஒரு வாதத்தை ஜெயலலிதா சொல்லுகிறார்.. கொள்முதல் செய்கிற பாலை நமக்கு அப்படியே விற்பதில்லை.. பாலில் உள்ள சத்துகளை கொஞ்சம் எடுத்து அதன் மூலம் பாலின் உப பொருட்கள் நெய், வெண்ணெய், பால்கோவா தயாரிப்பு, தயிர், மோர், லஸ்ஸி, வாசனை ஏற்றப்பட்ட பால், பால் பவுடர் என பல வழிகளில் இலாபம் பார்க்கிறது ஆவின் நிறுவனம்.. நமக்கு கிடைப்பது ஏறக்குறைய பாதி சத்துக்கள் எடுக்கப்பட்ட பால் தான்.. ஆகையால் கொள்முதல் விலை அதிகமாக கொடுப்பதால் மட்டுமே விற்பனை விலை ரூ.6.30 வரை அதிகரிக்கப்பட்டது என சொல்வது தவறான வாதம்..
அனு,சென்னை7 Months ago
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்கில் நடந்து கொள்வது உண்மையானால், அது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நம் நாட்டின் இறையாண்மையின் மேல் தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அது குந்தகம் விளைவிக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் அது தலை குனிவு. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியோ அல்லது ஒரே கூட்டணியை சேர்ந்த கட்சியோதான் ஆட்சி செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுவதுதான் அத்தகைய நிலை. தமிழக மக்கள் இது குறித்து சிந்திக்கவேண்டும்.
SK7 Months ago
@எம்.சி.ராமசந்திரன் : இதே வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் ஓட்டி லாபம் சம்பாதிப்பது எப்படி? கொஞ்சம் யோசிச்சு பாருங்க உண்மை புரியும்.
vijaya lakshmi7 Months ago
ஒரு சின்ன கணக்கு
பால் விலை உயர்வு - ரூபாய் .12 -(6*2 லிட்ரெ)

பஸ் கட்டண உயர்வு - ரூபாய் .4 -
(சராசரி நாள் ஒன்றுக்கு கூடுதல்
செலவு உத்தேசமாக ))

மின் கட்டண உயர்வு- ரூபாய்.4 -
(உயர்த்தப்பட உள்ளது
நாள் ஒன்றுக்கு கூடுதல்
செலவு உத்தேசமாக )
மொத்தம் நாள் ஒன்றுக்கு - ரூபாய்.20 -
மாதம் ஒன்றுக்கு - ரூபாய்.600 -(30*20)
ஆண்டுக்கு - ரூபாய்.7200 -
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு - ரூபாய்.36000 -

இலவச மிக்சி,க்ரின்டெர்,பேன் மதிப்பு - ரூபாய்.6000 -

நிகர தெண்டம். - ரூபாய்.30000 -

பின் குறிப்பு:
1.ஆட்டுக்கு மாலை போட்டு மரியாதை செய்வது பிரியாணியை மனதில் வைத்து தான்.
2.இந்த அரசு உங்களுக்கு தோளில் துண்டு போடுவது,உங்கள் வேட்டியை உருவத்தான்.(நாகரிகம் கருதி வேட்டி என்று எழுதி இருக்கிறேன் )
3.அண்ணா ' நாமம்' வாழ்க, புரட்சி தலைவர் 'நாமம்' வாழ்க
suresh7 Months ago
to all amma supporters, all your explanations ok but why your mom always blaming Centeral government and others for this type of actions, is central goverment ask your amma to anounce free items to every body. If DMK made some mistakes why you mummy also doing the same thing. no one raise question in assembly also, so let her enjoy another 4.5 years political life. we are expecting more from your mummy, Like ELITE open DLITE dance clubs to increase income.
KUNTHAVI7 Months ago
THIS IS TOO TOO MUCH
      Displaying 1 - 25 of 158